இலக்கியங்களை வகைப் படுத்துதல் எழுத்தாளனை மட்டுமல்ல, வாசகனை, வாசிப்பு அனுபவத்தை வகை படுத்துவதற்காகவும் தான். மாயா யதார்த்தத்தின் சிறப்பு என்னவெனில் நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் ஒரு விஷயமாக, அந்தரங்கமான உணர்வுகளை தொடும் அனுபவமாக விளங்குவது தான். யதார்த்தமான ஒரு கதைக்குள், யதார்த்தம் கடந்த விந்தையான சங்கதிகள் வருவது மாயா யதார்த்த கதைகளின் லட்சணம். இந்த வகை கதைகளை பற்றி இன்னும் அறிய விரும்புகிறவர்கள் பின்வரும் இணைப்புகளில் எனது பகிர்வில் கேட்கலாம்; http://www.youtube.com/watch?v=SpbrMjaukTQ&feature=player_embedded http://www.youtube.com/watch?v=UFxfVt_sczg&feature=player_embedded இந்த இலக்கிய வகை அறிவியல் கதைகளின் இறுக்கத்தை, கட்டாயங்களை தளர்த்தி விடுகின்றன. வினோத கதை போல் எந்த கட்டாயங்களும் இல்லாத வெறும் அதீத கற்பனையும் அல்ல. இவை ஒரு மனிதனின் விந்தையான அனுபவத்தை குறிப்பவை. அந்த அனுபவம் ஏற்படாதவருக்கு விந்தை. அனுபவம் ஏற்பட்டவருக்கு யதார்த்தம். ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தின் ஒரு பகுதி என்றால், எல்லா மனிதர்களின் அனுபவ தொகுதி தான் ஒரு சமூகத்தின் அனுபவம். அ...
நூல்: ‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ (வெளியீடு: வானதி பதிப்பகம்) நூலாசிரியர் : கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் விமர்சனம் : கவிஞர் புதுயுகன் எளிமை சூழ் எழில்கள் “ நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்…” பாரதியாரின் இந்தப் பதவிப் பிரமாணத்தை அடியொற்றி அணிதிரண்டது கவிஞர் பட்டாளம். அதில் தனக்கானதொரு தனித்த அடையாளத்தை ஏற்று தொடர்ந்து இயங்கி வருகிற கவிஞர் திரு . ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் . ‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ என்ற தலைப்பில் அவர் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிதை நூல் அந்த அடையாளத்தின் சமீபச் செதுக்கல். தான் சாதாரணன் என்று இயல்புக் கட்டத்தில் துவங்கி நாள்படகொள்கை சிதையாது , தொடர்ந்து இயங்குதல் சமூக நலன் காக்கும் ஒரு வளம். அந்த வளத்தில் தேர்ந் து மலர்களாக கவிதைகளை இந்த நூலில் பூக்கச் செய்திருக்கிறார் கவிஞர் . அதனால் சாரலில் நனைந்து...
Comments
Post a Comment